பல்வேறு விமர்சனங்களைத் தொடர்ந்து பதவி விலகிய கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் முதன்மை செயல் அலுவலர்

கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரி மாநில அளவில் விளம்பரம் செய்யப்பட்டு, பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் 1ம் தேதியன்று நேர்காணல் நடத்தப்பட்டு ஆர்.சுகன்யா என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.

இவருக்கு கடந்த 4ம் தேதியிட்ட பணி நியமன ஆணை வழங்கப்பட்டு ஆகஸ்ட் 11ம் தேதியன்று கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், முதன்மை செயல் அலுவலர் ஆர்.சுகன்யா, மேலாண்மை இயக்குநருக்கு முகவரியிட்ட கடிதத்தில், "தான் மேற்படி பதவிக்கு முழு தகுதியுடன் எவ்வித விதிமீறல்களும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டதாகவும், விரும்பத்தகாத விமர்சனங்கள் தொடர்ந்து வருவதால் மேற்கொண்டு இப்பணியில் தொடர விரும்பவில்லை எனவும் தனது பணி விலகலை ஏற்றுக்கொள்ளுமாறும்" தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இவரது பணி விலகல் கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய முதன்மை செயல் அலுவலர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக கோவை மாநகராட்சி ஆணையரும், கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநனருமான க.விஜயகார்த்திகேயன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...