வாலிபர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவையில் கடந்த 2015-ம் ஆண்டு வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டு வெடிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் செங்காடு பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவரது மகன் ராஜேஷ்குமார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆவாரம்பாளையம் ராமகிருஷ்ணா மருத்துவமனை சந்திப்பு பகுதியில் 7 பேர் கொண்ட இளைஞர் கும்பலால் சரமாரியாக ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜேஷ்குமார் உயிரிழந்ததையடுத்து அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி அவரை தாக்கிய 7 பேரை பந்தையசாலை காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இது தொடர்பான வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, வழக்கில் தொடர்புடைய பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஏழு பேரில் ராமகிருஷ்ணன், அஜித்குமார், கார்த்திக், சக்திவேல் மற்றும் அருண்பாண்டி உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டணை வழங்கி நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...