காரைக்கால் - பெங்களூரு பயணிகள் ரயில் விபத்தில் பயணிகள் உயிர்தப்பினர்

இன்று காலை 11.47 மணியளவில் விருத்தாசலம் சேலம் பயணிகள் ரயில் எண்.76850 ஆத்தூர் சின்னசேலம் இடையே ஆளியக்கமற்ற லெவல் கிராசிங்கை கடக்கும் போது, டிரெயிலர் கொண்ட ஒரு டிராக்டர் அவசரமாக லெவல் கிராசிங்கை கடக்க முற்பட்டு ரயிலின் பின்புறம் உள்ள எஞ்சின் பகுதியை சேதப்படுத்தியது. 



இதனால் அந்த டிராக்டரின் டிரெயிலர் தனியாக பிரிந்தது. டிராக்டர் ஓட்டி வந்தவர் தனது டிராக்டரை விரைவாக ஓட்டி சம்பவ இடத்தில் இருந்து அகன்று விட்டார். ரயிலின் இயக்குநர் டிராக்டர் ஓட்டி தனது காதில் மொபைல் போன் ஹெட்செட் போட்டுக் கொண்டு வந்ததால் ரயில் சத்தத்தை கவனிக்காமல் விரைவாக வந்து ரயிலில் மோதியதாக தெரிவித்துள்ளார்.  



மதியம் 01.05 மணிக்கு சேலத்தில் இருந்து மீட்புப்பணிகளுக்காக ஒரு ரயில் அனுப்பப்பட்டு அது தற்போது சேதமான ரயில் நிறுத்தப்பட்டுள்ள சின்னசேலம் ரயில்நிலையம் சென்றடைந்துள்ளது. திருச்சி பொன்மலை ரயில்பணிமனையில் இருந்து பொறியாளர்கள் சேதமான ரயிலை ஆய்வு செய்து வருகின்றனர். ஆராய்ந்து அதை அப்படியே எடுத்து வர முடியுமா அல்லது சேதமான பகுதியை நீக்கி விட்டு எடுத்து வர முடியுமா என்று முடிவு செய்வார்கள். 



இந்த விபத்தால், காரைக்கால் பெங்களூரு பயணிகள் ரயில் எண் 56513 சின்னசேலத்தில் நிறுத்தப்பட்டு தற்போது சுமார் 2 மணி நேரம் தாமதமாக சேலம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த விபத்தால் யாருக்கும் காயம் உயிரிழப்பு ஏதுமில்லை எதுவும் ஏற்படவில்லை. 

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...