கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த மரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ அடுத்துள்ள காமராஜர் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மில் அருகே இருந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் வெட்டினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மீதமுள்ள மரங்கள் வெட்டப்படுவது நிறுத்தப்பட்டது.



இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

தனியார் மில் அருகே சாலை ஓரத்தில் இருந்த மரங்களால் எந்த ஒரு பாதிப்பும் இல்லாத நிலையில் இந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் எதற்கு வெட்ட வேண்டும். தனியார் மில்லின் காம்பவுண்ட் அருகில் ஏ.டி.எம் இயந்திரம் அமைக்க பணி மேற்கொண்டபோது மரத்தின் வேர் பாதிக்கப்பட்டு மரம் சாய்ந்துவிட்டதாக மரம் வெட்டியவர்கள் கூறுகின்றனர். இது குறித்து மில் நிர்வாகத்திடம் கேட்டபோது மரத்தை அகற்ற தாங்கள் சொல்லவில்லை என தெரிவிக்கின்றனர். இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 



இதனைத் தொடர்ந்து மரங்களை வெட்ட வந்தவர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து 5 மரங்கள் வெட்டப்பட்டிருந்த நிலையில் மீதமுள்ள 3 மரங்களை வெட்டாமல் வெட்டபட்ட கிளைகளை மட்டும் நெடுஞ்சாலைத் துறையினர் அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பரபரப்பு நிலவியது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...