அணிகள் இணைந்தாலும் பாஜக பிடியில்தான் அதிமுக இருக்கும் என விசிக தொல்.திருமாவளவன் பேட்டி

கட்சி நலன், ஆட்சி நலன் ஆகியவற்றை தாண்டி மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் பிடியில் இருந்து அதிமுக அணிகள் செயல்படுகிறது என கோவையில் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மத அடிப்படைவாத சக்திகளால் கோவை மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்க கோவை மக்கள் மேடை என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விமானம் மூலம் இன்று கோவை வந்தார். அப்போது, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

அதிமுக இரு அணிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்ததாக அறிவிகப்பட்டாலும், அதிமுக-வினரிடையே ஒற்றுமை, கட்டுக்கோப்பு இருக்கும் என தெரியவில்லை. அதிமுகவில் புதிய அணி உருவாகும் வாய்ப்பு உள்ளது. தமிழக அரசியலில் மீண்டும் குழப்பம் உருவாகும். அதிமுகவில் மீண்டும் இரு அணிகள் இருக்கும் என யூகிக்க முடிகிறது.

கட்சி நலன், ஆட்சி நலன் ஆகியவற்றை தாண்டி மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் பிடியில் இருந்து அதிமுக அணிகள் செயல்படுகின்றனர்.

இரு அணிகள் இணைப்பிற்கான நிபந்தனைகள் முன் கூட்டியே பேசப்பட்டிருக்கும். அதனால் அமைச்சரவை மாற்றம் உடனடியாக நடத்தப்படுகிறது.

ஆளும் கட்சியினர் தமிழக மக்களை இளிச்சவாயர்கள் ஆக்குகின்றனர் என்ற ரீதியில் நடிகர் கமல் டுவிட்டர் மூலம் கருத்து சொல்லி இருக்கின்றார் என புரிந்து கொள்ள முடிகின்றது, அது சரிதான்.

தற்போதைய சுழலில் தினகரன் தலைமையிலான குழுவினர் என்ன முடிவு எடுக்கின்றனர் என்பதை பொறுத்து அரசு நிலைக்குமா? அல்லது அதிரடி அரசியல் மாற்றம் நடக்குமா? என்பது தெரியவரும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா-வின் வேதா இல்லம் குறித்து உயில் எழுதி வைத்திருக்கின்றாரா என்பது தெரியவில்லை. உயில் எழுதவில்லை என்றால் வேதா இல்லத்தை அரசு உடமை ஆக்குவதில் தவறில்லை.

தமிழகத்தில் ஆட்சி கவிழாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பா.ஜ.க-விற்கு கொடுக்கப்பட்டு இருக்கும். ஆட்சி கவிழ்க்கப்பட்டாலும் அடுத்த தேர்தல் வரை கவர்னர் ஆட்சியை கொண்டு வரலாம். மேலும் தமிழருவி மணியனின் ஆருடங்கள் பலித்ததில்லை.

இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...