குடிசைமாற்று வாரியத்தில் வீடு பெற ரூ.36 ஆயிரம் கேட்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு

25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இடத்தில் இருந்து வெளியேற அதிகாரிகள் மிரட்டுவதாகவும், குடிசை மாற்று வாரிய வீடு வழங்க 36 ஆயிரம் ரூபாயினை அதிகாரிகள் கேட்பதாகவும் கூறி 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை வி.எச் சாலை சி.எம்.சி காலனி பகுதியில் துப்புரவு பணியாளர்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மட்டசாலை என்ற பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீடு கட்ட கடந்த 2014-ம் ஆண்டு 377 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிலையில் இதுவரை அப்பகுதி வீடுகளுக்கு மின்சார வசதி செய்து தரப்படவில்லை.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் இதுவரை நாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்படாத நிலையில் தற்போது சிலர் குடிசை மாற்று வாரியம் மூலமாக வீடு வழங்க 4 நாட்களுக்குள் 36 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மிரட்டல் விடுத்து வருகின்றனர். 



மேலும், இதில் விருப்பம் இல்லாத மக்கள் வெள்ளலூருக்கு செல்லுமாறும் அதிகாரிகள் மிரட்டல் விடுக்கின்றனர். இதனால், தங்கள் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் தற்போதுள்ள அதே இடத்தில் புதிய வீடுகள் கட்டி மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...