சிஐஐ கோவை மண்டலம் சார்பில் "கட்டிடம் நுண்ணறிவு தொழில் நுட்பங்கள்" குறித்து கருத்தரங்கு

சிஐஐ கோவை மண்டலத்தின் சார்பில் நடைபெற்ற 17-வது மாநாட்டில் "கட்டிடம் நுண்ணறிவு தொழில் நுட்பங்கள்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், கட்டிடத் துறையில் உற்பத்தி செயல்திறன் மற்றும் தொழில்நுட்பங்கள், நுணுக்கங்கள், உற்பத்தி அமைப்பில் அறிவார்ந்த நிறுவனங்களை உருவாக்குவதன் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பிரதான விருந்தினராக மைன்ட்ரீ லிமிடெட் நிர்வாகத் தலைவர் கிருஷ்ணகுமார் நடராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "எதிர்காலம் நுண்ணறிவு நிறுவனத்திற்கு சொந்தமானது. செயற்கை நுண்ணறிவு, கிளவுட் போன்ற சிக்கலான தொழில்நுட்பங்களை நிறுவனங்களே கையாள வேண்டும். அதனால் வளர்ச்சி அடைவது மற்றும் தொழில்நுட்பத்தில் செழிப்பும் ஏற்படும் என்றார். 

இதனைத்தொடர்ந்து பேசிய சிஐஐ கோயம்புத்தூர் மண்டலத்தின் தலைவரான எஸ்.நாராயணன் கூறுகையில், இந்த நிகழ்வானது உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை புரிந்து கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் ஒரு தளமாக விளங்குகிறது என்றார்.

பின், ராபர்ட் போஷ் இன்ஜினியரிங் மற்றும் பிசினஷ் சொல்யூஷன்ஸ் துணைத் தலைவர் ஸ்ரீராம் டிவி உரையாற்றியதைத் தொடர்ந்து, கேஜி இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி பி.ஜெயமுரளி நன்றியுரையாற்றினார்.

மாநாட்டில், மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், அமேசான் இணைய சேவைகள் பிரைவேட் லிமிடெட், காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், ராபர்ட் போஷ் பொறியியல் மற்றும் வர்த்தக தீர்வுகள் போன்ற முன்னணி தொழிற்துறைகளிலிருந்து 200-க்கும மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...