தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் இருவார கால தூய்மை விழிப்புணர்வு நடவடிக்கைகளின் முதல் மற்றும் இரண்டாம் நாள்

இந்திய ரயில்வே ரயில் நிலையங்கள் மற்றும் இதர ரயில்வே இடங்களில் சுற்றுப்புற தூய்மையை மேம்படுத்த பயணிகள் மற்றும் ரயில்உபயோகிப்பாளர்களின் ஒத்துழைப்போடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தெற்கு ரயில்வே சேலம் கோட்டம், இத்தகு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 16.08.2017 முதல் 31.08.2017 வரை இரு வார காலத்திற்கு மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு அவர்களின் வழிகாட்டுதலின் படி தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. இவை தூய்மை விழிப்புணர்வு நாள், தூய்மை பிரச்சார நாள், போன்ற பல்வேறு தலைப்புகளில் மேற்கொள்ளப்படும். 

இருவார கால நிகழ்வுகளின் முதல் நாளான நேற்று (16.08.2017) தூய்மை விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்பட்டது. நேற்று சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி போன்ற முக்கிய ரயில்நிலையங்களில், ரயில்வே ஊழியர்கள், ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் ரயில் பயணிகள் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் வழி நடத்த தூய்மை உறுதி மொழி மேற்கொண்டனர். 



இரண்டாம் நாளான இன்று இன்று (17.08.2017) தூய்மை பிரச்சார நாளாக அனுசரிக்கப்பட்டது. இன்று சேலம் கோட்ட தலைமை அலுவலகத்தில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் தலைமையில் சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நாடெங்கிலும் பொது இடங்களை சுத்தமாக பராமரிக்கவும், ரயில்நிலையங்கள் மற்றும் ரயில்வே இடங்களை மேலும் சுத்தமாக பராமரிக்கவும், மற்றவர்களிடையே சுத்தம் பற்றிய விழிப்புணர்வு உண்டாக்கவும், தங்களது நேரம் மற்றும் சக்தியை ஈடுபடுத்துவதாக தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...