கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்


கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோல் கான் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், சட்டம் ஒழுங்கு காவல் துறை துணை ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர், இணை வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் 2016 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட வைப்புத் தொகையினை உடன் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு வழங்க தெரிவிக்கப்பட்டது.

மேலும், தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் பழுதுகள் ஏதேனும் இருப்பின் உரிய முறையில் பழுது பார்த்து தயார் நிலையில் வைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மற்றும் புகார்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்து தீர்வு காண மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார்.

கோவை மாவட்டத்தில் எஸ்ஆர்பி அம்மணி அம்மாள் மேல் நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம் மற்றும் பள்ளப்பாளையம் பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் காவல் துறை பாதுகாப்புடன் உள்ளாட்சித் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையும், மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையையும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஆய்வு செய்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...