நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவக் கலந்தாய்வு நடத்த வேண்டும் எனக் கோரி சிபிஎஸ்சி மாணவர்கள் தர்ணா

நீட் தேர்வின் அடிப்படையிலே இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வு நடைபெற வேண்டும் எனவும் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என நீட் தேர்வு எழுதிய சிபிஎஸ்சி மாணவர்கள் மற்றும் மாநில பாடத்திட்டத்தில் படித்த சில மாணவர்கள், தங்கள் பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



நீட் தேர்வின் அடிப்படையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் எனக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழக அரசு இந்த ஆண்டு மத்திய அரசிடம் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க டெல்லி வரை சென்று கோரிக்கை விடுத்து வந்துள்ளது. ஆனால், எங்களைப் போன்ற நீட்டுக்கு ஆதரவு கொடுக்கக் கூடிய மாணவர்களின் கருத்துக்களையும் இந்த அரசாங்கம் கேட்க வேண்டும். 



நீட் தேர்வுக்காக பல பயிற்சி வகுப்புகள் எடுத்து படித்துள்ளோம். தற்போது நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற ஒருசிலரின் கருத்துகளை வைத்து பேசக்கூடாது.

நீட் தேர்வின் அடிப்படையில் அனைவரையும் தேர்வு செய்ய வேண்டும். உடனடியாக நீட் தேர்வின் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிட்டு கலந்தாய்வு நடத்த வேண்டும். தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்' என்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...