எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு உதகையில் படகு போட்டி

உதகை படகு இல்லத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக அவர் நடித்த “படகோட்டி” திரைப்பட மாதிரியில் வேடமணிந்து நடைபெற்ற படகு போட்டியினை இன்று மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.



அதனைத் தொடர்ந்து, “நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தைத் தவிர்க்கும்பொருட்டு, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 24 பேர் அடங்கிய 2 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டது.



இவர்களில் 12 பேர் கொண்ட ஒரு குழுவிற்கு உதகை படகு இல்லத்திலும், 12 பேர் கொண்ட மற்றொரு குழுவிற்கு உதகை தாவரவியல் பூங்காவில் பணிபுரிய பணியாணை வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் முக்கிய பணி படகு இல்லத்திற்கும், தாவரவியல் பூங்காவிற்கும் வருகைத்தரும் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் இல்லா நீலகிரி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதலும், அவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின்மீது வண்ண ஸ்டிக்கர்கள் ஒட்டி அதற்கான தொகை ரூ.10 சுற்றுலா பயணிகளிடம் வசூலிக்கப்படுவதாகும். அச்சுற்றுலா பயணிகள் திரும்ப வரும்போது வண்ண ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மீள ஒப்படைக்கப்படும்போது வசூலிக்கப்பட்ட ரூ.10 சம்பந்தப்பட்ட சுற்றுலா பயணிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

அதுமட்டுமன்றி மாவட்டத்தின் 8 சோதனைச் சாவடிகளில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, நாள்தோறும் பிளாஸ்டிக் கொண்டு வரும் சுற்றுலா பயணிகளிடம் எல்லைகளிலே தடுத்தி நிறுத்தி அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்திற்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை அறவே ஒழிக்க முடியும்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் ரேணுகாதேவி, சுற்றுலாத்துறை அலுவலர் ராஜன், சுற்றுலா வழிகாட்டியினர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...