தேசிய கைத்தறி நாள் கொண்டாட்டம்

கோவையில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகளில், விதவிதமான கைத்தறி புடவைகள் அணிந்து கல்லூரி மாணவிகள் ஒய்யரமாக நடந்து வந்ததது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஒரு தனியார் அரங்கத்தில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவிகளுக்கிடையேயான கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. மக்கள் சேவை மையம் சார்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், 40 கல்லூரிகளை சேர்ந்த 1500 மாணவிகள் கலந்து கொண்டனர். இதன் இறுதி சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் விதவிதமான கைத்தறி புடவைகள் அணிந்து கல்லூரி மாணவிகள் ஒய்யரமாக நடந்து வந்தனர். 

இளைஞர்கள் மத்தியில் கைத்தறி புடவைக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டி நடத்தப்படுவதாகவும், இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டளாரும், பாஜக மாநில பொதுச்செயலாளருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார். மேலும் மாவட்டந்தோறும் நூல் வங்கிகள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,கைத்தறியினை ஊக்குவிக்க நெசவாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இதில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், கைத்தறி தொழிலாளர்களின் நிலை மற்றும் கைத்தறி புடவைகளின்  மதிப்பு குறித்து இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டி நடைபெற்று இருப்பதாக கூறினார். தொடர்ந்து நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பேசிய அவர்,யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் பிரபல நடிகர் என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு  அரசியலில் நுழைவது  தவறு என குறிப்பிட்டவர் அரசியல் கட்சி தலைவர்களின் வழிகாட்டுதலின் பேரிலே திரைத்துறையை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் அரசியல் தலைவர்களாகி உள்ளனர் என தெரிவித்த அவர், உடனடியாக நடிகர் ரஜினியோ அல்லது கமல்ஹாசனோ அரசியலுக்கு வந்தால் அவர்களை தலைவராக  ஏற்றுக்கொள்ள மாட்டேன் என தெரிவித்தார்.

இந்த போட்டிகளில பங்கேற்று  முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...