கோவையில் அரசு மணல் குவாரிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் ஆவணங்கள் சரிபார்க்கும் சிறப்பு முகாம் துவக்கம்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அரசு மணல் குவாரிகளில், பயன்படுத்தப்படும் வாகனங்களின் ஆவணங்களை சரிபார்க்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசின் மணல் இணைய சேவையில் மேற்கொள்ளப்படும் வாகனப் பதிவுகளில் எழும் முறைகேடான பதிவுகளை தவிர்க்கும் பொருட்டு வாகன ஆவணங்களை சரிபார்த்தலுக்கான சிறப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 7) முதல் வரும் 11-ம் தேதி வரை காலை 10 மணிமுதல் மாலை 5.30 மணி வரை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது.

வாகன உரிமையாளர்கள் www.tnsand.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தில் தங்கள் வாகனத்தில் நடப்பில் உள்ள வாகன பதிவு புத்தகம், வாகன அனுமதிச் சான்று வாகன தகுதிச் சான்று சாலை வரி ரசீது மற்றும் காப்பீட்டு விவரங்கள் ஆகியவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்து, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் படிவத்துடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம். பதிவேற்றிய மேற்காணும் ஆவணங்களுக்கான நகல்களுடன் சிறப்பு முகாமில் காண்பித்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

இம்முகாமானது வாகன தரவுகளை ஒழுங்குபடுத்த நடைபெறுகின்றது. இம்முகாமிற்கு வாகனங்களை கொண்டு வரவேண்டாம். முகாமில் வாகனங்கள் சரிபார்க்கும் வாகனங்கள் மட்டுமே இணையதள மணல் சேவையினை பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும், தவறான ஆவணங்கள் கொண்ட வாகனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிசந்திரன், செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி செயற் பொறியாளர்கள் செந்தில்குமார், புவனேஷ்வரி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உதயகுமார், பால்ராஜ், கார்த்திகேயன், போக்குவரத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உட்பட லாரி உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...