இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் சதாம் உசேனை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி


இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சதாம் உசேனை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கோவை சுப்ரமணியம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் கொலையாளிகளுக்கு உதவியதாக அபுதாஹிர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 2-ம் தேதி கருமத்தம்பட்டி பகுதியில் தலைமறைவாக இருந்த சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சதாம் உசேனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் கோவை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மதுரசேகரன் சதாம் உசேனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும் காவலின் போது 2 நாட்கள் சதாமை அவரது வழக்கறிஞர் சந்தித்து பேசவும் அனுமதி அளித்து உத்தரவிட்டார். 

இது குறித்து பேசிய சதாம் தரப்பு வழக்கறிஞர் ப.ப.மோகன், இவ்வழக்கு ஜோடிக்கப்பட்டது எனவும் விசாரணை தேவையில்லை என தங்கள் தரப்பில் வாதிட்டதாகவும், இருப்பினும் விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையடுத்து சதாமை போலீசார் தனியிடத்தில் வைத்து விசாரிக்க பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...