நீலகிரியில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத் துறைகளின் கலந்தாய்வுக் கூட்டம்

நீலகிரி மாவட்டம், உதகை, தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் இன்று (ஜூலை 4) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.முத்தையா தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத் துறைகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.



ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் குறித்தும், பைக்காரா - மாயார் நீர் மின் திட்டம் மற்றும் குந்தா நீர் மின் திட்டம் ஆகிய இரண்டு மின்னுற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மின் நிலையங்களின் விவரங்களும், ஒவ்வொரு மின் நிலையங்களிலுள்ள மின்னாக்கிகளின் நிலை குறித்தும், அணைகளின் நீர் இருப்பு மற்றும் ஈடான மின்உற்பத்தி அளவுகள் குறித்தும், கடந்த ஐந்து வருடங்களில் மின்நிலையங்களின் மின் உற்பத்தி செயல்திறன் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், கூடலூர் பகுதியில் மின் நுகர்வோர்கள் நலன் கருதி சீரான மின்சாரம் வழங்க துணை மின் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கோத்தகிரி வட்டத்திலுள்ள கோடநாடு, கெரடா மட்டம், ஈளாடா, நெடுகுளா, கிரீன் டீ தொழிற்சாலை மற்றும் மேடநாடு ஆகிய பகுதிகளின்மின் அழுத்த குறைபாடுகளை சீர் செய்யவும் துணை மின் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சேரம்பாடி (ம) உப்பட்டி ஆகிய பகுதிகளில் துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதேபோல் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகம் மொத்த ஏக்கர் நிலப்பரப்பில் எத்தனை ஏக்கரில் தேயிலை விளைவிக்கப்படுகிறது எனவும், தேயிலை மகசூலைப் பெருக்க என்னென்ன வழிமுறைகளை நிறுவனம் மேற்கொண்டுள்ளது எனவும், தேயிலைச் செடியின் கிளைகளை வெட்டுதல் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை செய்யப்படுகிறது எனவும், அதன்மூலம் உற்பத்தி எவ்வாறு உயர்த்தப்படுகிறது என்பது குறித்தும் இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  தொழிற்சாலைகளில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களின் நலன் குறித்தும், அவர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க நிறுவனம் மருத்துவமனை ஏதேனும் நிறுவியுள்ளதா என்பது குறித்தும் ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும் இவ்விரு துறைகளின் நிறை குறைகளை கேட்டறிந்த குழுத்தலைவர் அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் ஆய்வுக் குழு உறுப்பினர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...