பொதுக் கட்டிடங்கள் உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு பொதுக்கட்டிடங்கள் உரிமச் சட்ட விதிகளின் படி பொதுக்கட்டிடங்களின் உரிமையாளர்கள் அல்லது குத்தகைதாரர்கள், உரிமதாரர், மேலாளர், அறங்காவலர், முதல்வர், செயலாளர் என அக்கட்டிடத்திற்குப் பொறுப்புள்ள நபர்கள், பொது கட்டிட உரிமம் வழங்கக் கோரி தொடர்புடைய வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தகைய பொதுக் கட்டிடங்களுக்கு அவற்றின் உறுதித் தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு பொதுக்கட்டிட உரிமங்கள் வழங்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்திற்குள் செயல்பட்டு வரும் பொதுக்கட்டிடங்களுக்கு இதுவரை உரிமம் பெறாதவர்கள் உரிமம் பெற்ற கட்டிட பொறியாளரின் சான்று, தீயனைப்புத் துறையின் தடையின்மைச் சான்று மற்றும் சுகாதாரச் சான்று ஆகியவற்றுடன் தொடர்புடைய வட்டாட்சியருக்கு உரிய கட்டணத்தைச் சேலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், உடனடியாக உரிமம் பெற்று அதன் பின்னரே அதனைப் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஏற்கனவே, பொதுக்கட்டிட உரிமம் பெற்றுள்ள நபர்கள் உரிய காலக்கெடுவிற்குள் அதனைப் புதுப்பித்து நடப்பில் வைத்திருக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...