ஹீரோ மோட்டார் நிறுவனப் பெயரில் போலி வாகன உதிரி பாகங்கள் விற்பனையில் ஈடுபட்டோர் கைது

கோவையில் மோட்டார் வாகன பாகங்களில் போலியான பாகங்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்த நிலையில் சிபி சிஐடி, வீடியோ பைராசி செல் அதிகாரிகள் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல வாகன மோட்டார் உதிரி பாகங்கள் விற்பனை நிலையங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது, மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ பாலாஜி ஆட்டோ ஸ்பேர்ஸ், மைசூர் ட்ரன்க் சாலையில் செயல்பட்டு வரும் லோட்டஸ் ஆட்டோ ஸ்பேர்ஸ் மற்றும் காரமடை சாலையில் செயல்பட்டு வரும் ரோனக் ஆட்டோ ஸ்பேர்ஸ் ஆகிய கடைகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், ஹீரோ மோட்டார் நிறுவன பெயர் பதித்த போலியான வாகன உதிரி பாகங்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, போலி வாகன உதிரி பாகங்களை பறிமுதல் செய்த கோவை மாவட்ட சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து, ஸ்ரீ பாலாஜி ஆட்டோ ஸ்பேர்ஸ் நிறுவனத்தின் சத்தீஷ் குமார் ராஜ்கோபால், லோட்டஸ் ஆட்டோ ஸ்பேர்ஸ்யின் ஜோதி குமார் இராமசுவாமி, ரோனக் ஆட்டோ ஸ்பேர்ஸ்யின் ராஜேந்திர குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...