குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தந்தையால் பரபரப்பு

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி சிறு சிறு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் தன்னை சிலர் காலி செய்ய வலியுறுத்தி மிரட்டுவதாகக் கூறி பாதிக்கப்பட்ட ஒருவர் தனது நான்கு குழந்தைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை போத்தனூர் அடுத்த நாகராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தனது மூன்று மகள் மற்றும் ஒரு மகனுடன் அப்பகுதியிலுள்ள புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பு அமைத்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அப்பகுதியில் புற்று கோவில் உள்ளதால் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று கூறி சிலர் ராஜாவை மிரட்டியதாக கூறப்படுகிறது.



எனவே வீட்டை காலி செய்யுமாறு அவர்கள் கூறவே போத்தனூர் காவல்நிலையத்தில் ராஜா புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த அவர் தனது நான்கு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டார்.



இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்படவே காவல்துறையினர் உடனடியாக அவர்களை மீட்டு பந்தையசாலை காவல்நிலையம் அழைத்து சென்றனர். மிரட்டல் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தனக்கு உரிய தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அப்போது அவர் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...