லக்ஷ்மி மெஷின் வொர்க்கர்ஸ் நிறுவனம் சார்பில் டிஜே நினைவு புகைப்படக் கண்காட்சி

லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் புகைப்படக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் டிஜே நினைவு புகைப்படக் கண்காட்சி மற்றும் போட்டி நடைபெற்றது. 



இப்போட்டியானது, லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் டி.ஜெயவர்த்தனவெலு நினைவாக 2012 முதல் கொண்டாடப்படுகிறது. 



அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற புகைப்படம் எடுக்கும் போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். 



கடந்த ஜூன் 30ம் தேதியன்று www.djmpc.in என்ற ஆன்லைன் போர்ட்டல் மூலம் டிஜேஎம்பிசி 2017-ல் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து போட்டியாளர்களிடையே நடைபெற்ற போட்டியில் பாலன் மாதவன், ஆபூர்பா குமார் தாஸ் மற்றும் தியோடர்பாஸ்கரன், கே. மருதாசலம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். இந்தக் கண்காட்சி கோவை கஸ்தூரி ஸ்ரீநிவாசன் கலாச்சார மையத்தில் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறும்.



விலங்குகள் மற்றும் காடு சார்ந்த தலைப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 1484 பங்கேற்பாளர்கள் பங்கேற்ற நிலையில் அவர்களிடம் இருந்து 6674 பதிவுகள் பெறப்பட்டது. 

இந்த புகைப்படப் போட்டியில் விலங்குகள் புகைப்படப் பிரிவில் சச்சின் ராய் முதல் பரிசும், நிதின் ஜெயின் இரண்டாம் பரிசும் வென்றனர். தொடர்ந்து, நிலப்பரப்பு புகைப்படப் பிரிவில் திவாஸ் ஜி ஹெட்ஜ் முதல் பரிசும், தேப்ராஜ் சக்ரபர்த்தி இரண்டாம் பரிசும் வென்றனர். முதல் பரிசிற்கு தலா ரூ.2.5 லட்சம் ரூபாயியும், இரண்டாம் பரிசிற்கு ரூ.1.5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...