"கைது செய்ய வேண்டும் என்றால் குட்கா வழக்கில் தொடர்புடைய டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனை தான் கைது செய்ய வேண்டும், எங்களையல்ல", கோவையில் ஸ்டாலின் கடும் குற்றசாட்டு.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் எருமைப்பட்டியில் உள்ள கட்சராயன் ஏரியை பார்வையிடுவதற்கும், நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கக்கோரியும் நடைபெறும் ஆர்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவைக்கு விமான மூலம் வந்தார். ஸ்டாலின் சேலம் சென்றால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதற்காக கோவையிலேயே கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டிருந்தனர். அதனால், கோவை கணியூர் சுங்கச்சாவடியில் 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில் காத்திருந்தனர். 

இதனை அறிந்ததுடன், திமுகவினரும் விமான நிலையத்திலும், கணியூர் சுங்கச்சாவடியிலும் 600க்கும் மேற்பட்டோர் குவிய தொடங்கினர். இதற்கிடையே, கோவை விமான நிலையத்தில் கைதாக கூடாது என்ற ஸ்டாலினின் அறிக்கை  மேலும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. சுங்கச்சாவடி அடைந்த ஸ்டாலினை தடுப்புக்கயிர் மூலம் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், காவல்துறையினருக்கும் , திமுகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கருமத்தப்பட்டி டி.எஸ்.டி. முத்தரசு கைதாவதற்கான பிடிவாரண்ட் அளித்தார். முதலில் ஏற்க மறுத்த ஸ்டாலின், பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை ஏற்று கைதானர்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவால் தான் தமிழக அரசு நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறியவர், ஆனால் டெல்லி செல்வர்கள் அங்கே குனிகிறாற்களா,,காலில் விழுகிறார்களா? என்பது தெரியவில்லை என்று விமர்சித்தார். நீட் விவகாரத்தில் திமுகவால் தான் தமிழக அரசு அழுத்தம் கொடுக்கிறது.அமைதியாக நடக்கவிருந்த நீட் தேர்விற்கான போராட்டத்தை தடுப்பதே எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

110 விதியின் கீழ் 300 கோடி ரூபாய் குளங்களை தூர்வார ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எங்கள் பணியையும் சேர்த்து கணக்கீடு செய்து கொள்ளை அடித்த அமைச்சர்கள், அவர்களுக்கு துணைப்போன அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்தவர், கொடநாடு வழக்கை திசைதிருப்பவே வளர்மதி,திருமுருகன் காந்தி ஆகியோர் மீது குண்டர் சட்டம், திமுகவினர் கைது போன்ற செயல்களில் தமிழக அரசு ஈடுபடுவதாக குற்றச்சாட்டினார். 

பின்னர்,தேர்தல் நேரத்தில் ரூ. 570 கோடியை பிடிக்க முடியாதவர்கள் எங்களை கைது செய்வதா என்றும், அப்படி கைது செய்ய வேண்டும் என்றால் குட்கா வழக்கில் தொடர்புடைய டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனை தான் கைது செய்ய வேண்டும் என்று எஸ்.பி.யிடம் காரச்சாரமாக வாக்குவாதத்தில் ஸ்டாலின் ஈடுபட்டார்.

அவருடன்,சுப்புலட்சுமி ஜெகதீசன், வெள்ளக்கோவில் சுவாமிநாதன், பைந்தமிழ் பாரி, மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டும் கைதாகவும், சேலத்தில் நடைபெறும் நீட் ஆர்பாட்டத்தில் பங்கேற்க செல்ல ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து, நிர்வாகிகள் கைதாகாமல் சேலம் செல்கின்றனர். கைதானவர்களை கணியூர் சுங்கச்சாவடி அருகிலுள்ள ரங்கா மஹாலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவத்தினால் கணியூர் சுங்கச்சாவடியில் சுமார்  ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...