வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக் குண்டம் திருவிழாவில் தன்னலமற்ற சேவைபுரிந்த ​​​​ஊர்க்காவல் படை

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி, கோவை மாவட்ட ஊர்க்காவல் படை பிரதேச தளபதியின் மேற்பார்வையில், பெரியநாயக்கன்பாளையம் காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினருடன் இணைந்து 150 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்டனர்.



மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக் குண்டம் திருவிழாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை சீர்படுத்தவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்கவும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமலிருக்கவும் திட்டமிட்ட காவல் பணி, மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் ஆலோசனைப்படி கோவை மாவட்ட ஊர்க்காவல் படையினர் 24.7.2017 மாலை முதல் 25.7.2017 மதியம் 2 மணி வரை சேவையாற்ற பணி ஒதுக்கப்பட்டது.



வெவ்வேறு துறைகளில் பணிபுரியும் ஊர்க்காவல் படை நண்பர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களின் சொந்த பணி முடித்து காவல் பணியாற்றுவது தன்னலமற்ற சேவையாகவும், சமூகப் பணிக்கு அர்ப்பணிப்புக்காக 24.7.2017 இரவு வரை உறக்கம் துறந்து, அதிகாலை 3 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் சிரமம் இல்லாமல் பாதுகாப்பாய் குண்டம் இறங்க வரிசைப்படுத்தி, பொதுமக்களிடையே பொறுமையாய் நடந்து கொண்டு சேவையாற்றினர். இதில் கலந்து கொண்ட மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும், இந்த ஆத்மார்த்த பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை கோவை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்தது.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...