விஹெச்பி அமைப்பின் மாவட்ட செயலாளர் சிவலிங்கத்தின் கார் கண்ணாடிகள் உடைப்பு

கோவை ரத்தினபுரி பகுதியில் விஹெச்பி அமைப்பின் மாவட்ட செயலாளர் சிவலிங்கத்தின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கோவை மாவட்ட செயலாளராக சிவலிங்கம் என்பவர் உள்ளார். இவரது வீடு ரத்தினபுரி பகுதியில் உள்ளது. சிவலிங்கத்தின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த காரை, நேற்றிரவில் வந்த மர்மநபர்கள் கற்களை கொண்டு உடைத்துள்ளனர். முன்பக்கம் மற்றும் பின் பக்க கண்ணாடி கற்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. மேலும் அருகேயிருந்த ஒரு வீட்டின் மீதும் கல்வீச்சு நடந்ததாக கூறப்படுகிறது. இன்று காலையில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சிவலிங்கம், போலீசாருக்கு தகவல் அளித்தார். இதன்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த ரத்தினபுரி காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...