ஆடி அமாவாசையினை முன்னிட்டு முன்னோர்களை வழிபட நொய்யல் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்

ஆடி அமாவாசை நாளில் ஆறு, குளங்கள், கடற்கரைகளில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். இன்றைய தினம் ஆடி அமாவாசை என்பதால் ஈரோடு பவானி கூடுதுறை, கொடுமுடி, திருப்பூர் மாவட்டம் உடுமலை, பேரூர் நொய்யல் படித்துறை உள்ளிட்ட இடங்களில் புனித நீராடி பக்தர்கள் முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர். 



கோவை மாவட்டம், பேரூர் நொய்யல் படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாட்டில் இன்று ஈடுபட்டனர். ஆடிமாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசை என்பதால் வழக்கத்தை விட இன்று பேரூர் கோவிலில் கூட்டம் அதிகளவிலேயே காணப்பட்டது. இதில், இறந்துபோன தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து எள், அரசி, சர்க்கரை, பழம் ஆகியன படையலிட்டு பூஜை செய்தனர். 



இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதலே திரளான பக்தர்கள் கோவை மாவட்டம், பேரில் உள்ள நொய்யல் படித்துறையில் திரண்டு இறந்துபோன முன்னோர்களுக்கு திதிகொடுத்து வழிபட்டு வருகின்றனர்.



தொடர்ந்து, திதி முடித்துவிட்டு செல்லும்போது ஏழைகளுக்கு அன்னதானம், பசுக்கன்றுகளுக்கு அகத்திக்கீரைகளை வழங்கிச் சென்றனர். இதனால் நொய்யல் படித்துறையில் பக்கதர்களின் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது. 

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...