கோவையில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம்

கோவையில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெகு காய்ச்சலுக்கான சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாக நிலவேம்பு கஷாயம் உள்ளது. தற்போது நிலவேம்பு கஷாயம் பொதுமக்களுக்கு வழங்குவது கோவையில் ஒருசில பகுதிகளில் துவங்கியுள்ளது. 



உக்கடம் தெற்கு பகுதியில் உள்ள பிலால் நகர், பொன்விழா நகர், அண்ணா நகர், ரோஸ் கார்டன், சாராமேடு மற்றும் கரும்புக்கடை போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற சங்கம் சார்பில் 86-வது வார்டின் முன்னாள் கவுன்சிலர் சாதிக் அலி தலைமையில் வழங்கப்பட்டது.



பருவமழைக் காலங்களில், சுற்றுப்புற சுகாதாரம் உள்ளிட்டவயின் அடிப்படையில் பரவும் இதுபோன்ற நோய்களை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மாவட்ட நிர்வாகம், சுகாதாரம் உள்ளிட்ட அந்தந்தந்த உள்ளாட்சித்துறை பணியாளர்கள் உரிய நடவடிக்கை எடுத்து கோவை மாவட்டத்தில் பரவலாக பெருகி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...