கோவை - பொள்ளாச்சி பயணிகள் ரயில் சேவை இன்று முதல் துவக்கம்

மக்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த கோவை- பொள்ளாச்சி பயணிகள் ரயில் சேவை இன்று (ஜூலை 15) துவக்கப்பட உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு கோவை - பொள்ளாச்சி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி துவங்கப்பட்டது. சுமார் 8 ஆண்டுகாலம் நடைபெற்று வந்த இந்த பணிகள் கடந்த மார்ச் மாதம் முடிவடைந்தது. ஆனால், ரயில் போக்குவரத்து சேவை துவங்குவதற்கான தேதி குறிப்பிடப்படாமல் காலம் கடந்துவந்தது.

இந்நிலையில் இன்று கோவையில் இருந்து மதியம் 1.35 மணிக்கு பொள்ளாச்சிக்கு ரயில் (ரயில் எண்- 06081) புறப்படுகிறது. இந்த ரயில் பொள்ளாச்சிக்கு 2.40-க்கு சென்றடையும். தொடர்ந்து மாலை 3.15 மணியளவில் (ரயில் எண்- 06082) புறப்பட்டு கோவைக்கு 4.30 மணிக்கு வந்தடையும். 

இதன் துவக்க விழாவில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் கட்டுமான தலைமை பொறியாளர், உதவி தலைமை பொறியாளர் உட்பட பலர்கலந்து கொள்கின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...