விறகு அடுப்பில் சமைத்த பெண் தீயில் கருகி பலி


கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தெய்வானை. இந்த தம்பதியினருக்கு பெண்குழந்தை உள்ளது. 

ஏழ்மை காரணமாக முருகன் வீட்டில் கியாஸ் அடுப்பு இல்லை. தெய்வானை விறகு அடுப்பிலேயே சமையல் செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை விறகு அடுப்பில் சமைத்துக்கொண்டிருந்த தெய்வானையின் சேலையில் தீப்பிடித்தது. சுதாரித்துக்கொள்ளும் முன்பாக தெய்வானையின் உடல் முழுவதும் தீ பரவியது. இதனால் தெய்வானை கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

உடலில் சுமார் 60 சதவிகிதத்திற்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டிருந்த தெய்வானைக்கு மருத்துவமனையில் திவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி தெய்வானை இன்று காலை பறிதாபமாக பலியானார். 

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...