கோவை மாநகராட்சி பள்ளியில் முதல்முறையாக சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.



கோவையில் முதல்முறையாக மாநகராட்சி பள்ளியில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைக்க, 2013-ம் ஆண்டில் மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம், 4.5 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியிலுள்ள கால்பந்து மைதானத்தை மாற்றி அதற்கு பதிலாக ஹாக்கி மைதானம் அமைக்கப்படுகிறது.

2015ல் துவங்கிய இந்த பணி, தற்போது சுறுசுறுப்பாக நடக்கிறது. இதற்காக, 'ஆஸ்ட்ரோ டர்ப்' எனப்படும் செயற்கை புல் மைதானம் சர்வதேச தரத்தில் அமைக்கப்படுகிறது. சர்வதேச தர ஹாக்கி விளையாட்டுக்கு 91.4 மீட்டர் நீளம், 55 மீட்டர் அகலமான இடம் தேவை. ஆனால், தற்போது 100 மீட்டர் நீளம், 60 மீட்டர் அகலமாக போதுமான இடம் உள்ளதால் சுற்றிலும் காலரி அமைக்கவும் வசதி உள்ளது. இப்பணியை, தற்போது தில்லி சின்காட்ஸ் நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். 



அந்நிறுவனத்தின் மேற்பார்வையாளர் இதுகுறித்து கூறுகையில், ''6,500 சதுர மீட்டர் பரப்பளவில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படுகிறது. மைதானத்தை சுற்றிலும் நீர் வடிகால் அமைக்கப்பட்டு, குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு சில தினங்களில் இந்த பணியும் முடிந்து விடும். இதற்கு பின், மைதானத்தில் பாலியுரேதீன் என்ற கலவை ஊற்றப்படும். ஏற்கனவே தயார் நிலையில் உள்ள 'ஆஸ்ட்ரோ டர்ப்' மைதானம் முழுவதும் விரிக்கப்படும். அடுத்த சில வாரங்களில் மைதான பணி சிறப்பாக முடியும்,'' என்றார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...