நோட்டிஸ் இன்றி கட்டிடத்தை அகற்ற வந்ததாக அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த திருச்சபையினர்


கோவை சித்ரா பகுதியில் தென்னிந்திய திருச்சபை நடத்தும் பெண்கள் மேம்பாட்டு வாழ்வியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடந்த 1992-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த கல்லூரி அமைந்துள்ள இடம் தொழில் வணிகத்துறைக்கு சொந்தமானது.



இந்த நிலையில், சாலை மேம்பாட்டுக்காக இந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று கூறி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தொழில் வணிகத்துறையினர் மற்றும் போலீசார் திரண்டனர். அப்போது, முறையான நோட்டீஸ் வழங்காமல் கட்டிடத்தை இடிக்க அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி திருச்சபையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, 2 நாட்கள் அவகாசம் தருவதாக அதிகாரிகள் கூறிச்சென்றனர்.



இதனிடையே, கட்டிடத்தை நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தும் நேரத்தில் எங்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று திருச்சபையினர் கோரிக்கை விடுத்தனர்.



இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திருச்சபையினர் இந்த இடத்தில் தொழில் நிறுவனம் தொடங்குவதாக அரசிடமிருந்து நிலத்தை பெற்றுள்ளனர். ஆனால், தொழில் நிறுவனம் நடத்தாமல் பூட்டி இருந்ததால் தொழில் வணிகத்துறையினர் அந்த இடத்தை கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அதன் பேரில் தான் இன்று நெடுஞ்சாலைத்துறையினர் அந்த இடத்தை கையகப்படுத்த சென்றோம். குறிப்பிட்ட இடத்தில் ரவுண்டான அமைக்க அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது' என்றார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...