சௌரிபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது

சௌரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் 4 டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், சௌரிபாளையம் பகுதியில் உள்ள கருணாநிதி நகர், தேர்வீதி, கல்லறைவீதி,  ஜி.வி. ரெசிடென்சி என ஒரே பகுதியில் அருகருகே 4 டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது குடிக்க வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளை அகற்றக்கோரி இன்று கருப்பு கொடிகளுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 24 மணி நேரமும் அக்கடைகளில் மதுவிற்பனை நடைபெற்று வருகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் போராட்டம் நடத்திய போது டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் உத்திரவாதம் அளித்த நிலையிலும், இன்றுவரை டாஸ்மாக் கடைகளை அகற்றவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...