ஜிஎஸ்டி வரி பதிவிற்காக சேகரிக்கப்படும் தகவல்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணரும் வருமான வரித்துறை அதிகாரிகள்!

ஜிஎஸ்டி வரி பதிவிற்காக சேகரிக்கப்படும் தகவல்களை பாதுகாக்கும் தரவு மறையாக்கம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் வருமான வரித்துறை அதிகாரிகள் திணறியதால் பொதுமக்களின் குழப்பங்கள் தீர்க்க முடியாத நிலையே நிலவுகிறது.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை சார்பில் பத்திரிகையாளர்களுக்கான ஜிஎஸ்டி பயிலரங்கம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சேலம் மண்டல மத்திய கலால் வரித்துறை ஆணையர் கண்ணன், கோவை மண்டல துணை ஆணையர் கோவிந்தராஜ், பட்டய கணக்காளர் முரளி உள்ளிட்ட வருமானத்துறை அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் ஜிஎஸ்டி குறித்து மக்களிடையே சாதகமான அம்சங்களை மட்டும் வெளியிடுமாறு வலியுறுத்தினர்.



அப்போது, ஜிஎஸ்டி வரி பதிவிற்காக சேகரிக்கப்படும் தகவல்களை டேட்டா என்கிரிப்சன் எனப்படும் தரவு மறையாக்கம் செய்வது எப்படி என பத்திரிகையாளர் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அதிகாரிகள் தொழில்நுட்ப கேள்விகளுக்கு தற்போதைக்கு தங்களிடம் பதில் இல்லை என தெரிவித்தனர்.

ஜிஎஸ்டி தகவல்களின் பாதுகாப்பு பணிகள் 49 சதவீதம் அரசிடமும் 51 சதவீதம் எச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமும் உள்ளது. இதனால், தகவல்களை திருடுவதற்கு வாய்ப்பில்லை எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக 8 அம்ச தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், ஜிஎஸ்டி வரியில் 20 சதவிகித பொருட்கள் மட்டுமே விலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், மீதமுள்ள 80 சதவிகித பொருட்கள் விலை உயர வாய்ப்பில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் எந்தெந்த பொருட்களின் விலை உயரும் என கணிக்க முடியாது. தற்போது விலை உயர்வு ஆண்டுக்கு 2.18 சதவிகிதம் அளவிற்கு உள்ளது. ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படுவதால் இந்த விலை உயர்வு 3.5 சதவிகிதம் மட்டுமே உயர வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

தற்போது இந்திய அரசு 64 பிட் என்கிரிப்சனும், வாட்ஸ் ஆப் 128 பிட் என்கிரிப்சனும் பாதுகாப்பு அம்சங்களாக செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...