விஜய்-இன் மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தநாள் அன்று வெளியாகும்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தநாள் பரிசாக வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இதுவரை போஸ்டரில் ‘இளைய தளபதி விஜய்’ என வழங்கப்பட்ட பெயர் தற்போது மெர்சல் போஸ்டரில் ‘தளபதி விஜய்’ என மாறியுள்ளது.

சமீபகாலமாக, ரஜினியை தொடர்ந்து விஜயும் அரசியலுக்கு வருவதாக செய்திகள் அடிபட்டு வருகிறது. மேலும், இன்று விஜய் தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில்தான் விஜய்க்கு ‘தளபதி’ என்ற பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது ரசிகர்களுக்கு விஜய் அளிக்கும் பரிசாக கருதப்படுவதால், அவர்கள் மிகவும் குஷியாகியுள்ளார்கள்.

மேலும், இந்த ‘தளபதி’ பட்டம், அரசியல் ரீதியாகவும் விஜய்க்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏற்கனவே ஒரு தளபதி இருக்கும் நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள இந்த தளபதி பட்டம் என்ன தாக்கத்தை உருவாக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...