மரம் வடிவத்திலான வை-ஃபை மற்றும் காற்று மாசுபாட்டினை அளக்கும் 'ஸ்மார்ட் ட்ரீ' மாநகராட்சியில் அறிமுகம்

கோவை மாநகராட்சியில் வை-ஃபை வசதியுடன் சூரிய ஆற்றலில் இயங்கும் 'ஸ்மார்ட் ட்ரீ' மாநகராட்சி அலுவலகத்தில் முதல் முதலில் அறிமுகபப்டுதப்படுள்ளது. இந்த ஸ்மார்ட் ட்ரீயில் இலவச வை-ஃபை வசதியும், காற்று மாசுபாட்டினை அளக்கும் கருவியும் இதில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மாநகராட்சிகளை மேம்படுத்தும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சூரிய ஆற்றலில் இயங்கும் 'ஸ்மார்ட் ட்ரீ' அமைக்கப்பட்டுள்ளது.

மரம் வடிவிலான ஸ்மார்ட் ட்ரீ:



மரத்தைப் போன்று வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் ட்ரீ இந்தியாவில் முதல்முறையாக பொது மக்களுக்கு நிழல் தரும் வகையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு 'ஸ்மார்ட் ட்ரீ' அமைப்பதற்கு 3.5 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. 9 அடி ஆழத்தில் கான்ங்கீரட் மூலமாக தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 12 அடியாகும். 400 சதுரஅடியில் தரை தளத்தில் செயற்கை புல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் பொதுமக்கள் அமருவதற்கு இருப்பிடம் வசதியும் இந்த ஸ்மார்ட் ட்ரீ-யின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 பேனல்கள் மூலம் 120 சதுரடியில் மேல் பகுதியில் சோலார் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய ஆற்றல் கொண்ட சோலார் மூலம் ஒரு நாளைக்கு 8 யூனிட் வரை மின்சாரம் பெற முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் ட்ரீயில் இலவச வை-ஃபை வசதியும், காற்று மாசுபாட்டினை அளக்கும் கருவியும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.



இது குறித்து பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், 'முதல்கட்டமாக மாநகராட்சி முழுவதும் இது போன்ற சுற்றுச்சூழலுக்கு நன்மையான 30 'ஸ்மார்ட் ட்ரீ' அமைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் தரப்பிலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டெல்லியிலுள்ள ஸ்மார்ட் சிட்டி ஆணையமும் இத்திட்டத்தைப் பாராட்டியுள்ளது' எனக் கூறினார்.

Newsletter

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...