கேரள தேயிலை தோட்ட தொழிலாலர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி வால்பாறை தோட்ட தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு

தொழிற்சங்களுடான பேச்சு வார்த்தையில் கேரள மாநில தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் 313 ரூபாய் வழங்கபட்டு வருகிறது. அனால், வால்பாறையில் உள்ள தனியார் நிறுவன தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 234 ரூபாய் மட்டுமே வழங்கபட்டு வருகிறது.



ஒரே நிறுவனத்தில் ஒரே தொழிலை செய்யும் தொழிலாளர்களுக்கு இரண்டு வகையான மாறுபட்ட சம்பளம் வழங்குவதைத் தவிர்த்து ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வால்பாறையை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, "கடந்த 2016-ம் ஆண்டு வரை நாங்கள் சார்ந்திருந்த தொழிற்சங்களுக்கு உறுப்பினர் சந்தா செலுத்தி வந்தோம். 2017 ஜனவரி 1 முதல் சந்தா செலுத்தாமல் தொழிற்சங்க அமைப்புகளில் இருந்து விலகி விட்டோம்.

தற்போது நாங்கள் எந்த சங்கத்திலும் உறுப்பினராக இல்லாத போது தங்கள் சார்பாக தொழிற்சங்கங்கள் சம்பள பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒப்பந்தங்களில் கையொய்பமிட முயன்று வருகின்றனர். தினக்கூலியாக டி.ஏ-வுடன் சேர்த்து 290 ரூபாயை ஏற்று வேலை செய்ய உள்ளதாக பொய்யான அறிவிப்பை வெளியிட உள்ளனர். எந்த ஒரு தொழிற்சங்கத்திலும் உறுப்பினர்கள் அல்லாத தங்களை கலந்து ஆலோசிக்காமல் சம்பள ஒப்பந்தம் செய்யப்பட்டால் அது தங்களை கட்டுப்படுத்தாது. 



எனவே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சார்பில் எஸ்டேட்டின் தொழிலாளர் பிரதிநிதி, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து பேசி கேரளாவில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு இணையாக வழங்க நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...