மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மணல் விலையேற்றம், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மணல் தட்டுபாடின்றி கிடைத்தல், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். விலையேற்றத்தால் வேலை இழப்பு, நலவாரியத்தில் தேங்கி கிடைக்கும் பணபயன் விண்ணபங்களுக்கு காலதாமதமின்றி உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர்கள் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன் கூறும்போது, தற்போது மணல் விலை 1 யூனிட்டிற்கு 30,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மணலுக்கு மாற்றாக கட்டிடங்களுக்கு உபயோகிக்கப்படும் எம்.சாண்ட் மணலானது மணல் போல் தரமில்லை. மேலும், கட்டுமான பொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதால் வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்து 80 சதவிகிதம் கட்டுமான பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே, மாநில அரசு இப்பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மேற்கொள்ள வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...