கோவையில் யானைகள் தொடர்பான பிரச்சனை குறித்து முதலமைச்சரிடம் வலியுறுத்த உள்ளதாக எம்எல்ஏ எட்டிமடை சண்முகம் பேட்டி


கோவை மாவட்டம் மதுக்கரை, தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக 18 வயது மதிக்கத்தக்க ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றி வந்தது. இந்த யானை குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து சேதங்களையும் ஏற்படுத்தி வந்தது. மேலும், 3 வளர்ப்பு மாடுகளையும், 1 ஆடுவையும் இது தாக்கியது.

இதனைத்தொடர்ந்து, இந்த யானை கிராமப்பகுதிக்குள் நுழைவதை தடுத்து காட்டுக்குள் விரட்டும் முயற்சியாக கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அந்த யானை மதுக்கரை அருகேயுள்ள அய்யாசாமி மலைப்பகுதியிலேயே சுற்றி வந்தது.

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் அந்த யானை உடல் நலக்குறைவினால் உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர்  யானையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை வனக்கோட்டத்தில் நடப்பாண்டில் மட்டும் 11 யானைகள் உயிரிழந்து இருப்பது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், யானை இறந்த இடத்தை பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "யானைகள் கிராமப்பகுதிக்குள் நுழைவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. அதற்கான போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யானைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வருகின்ற சட்டப்பேரபை கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்த உள்ளேன்" என தெரிவித்தார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...