கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்ட பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது கொங்கு குளோபல் ஃபாரம் அமைப்பு. இந்த அமைப்பில் உள்ளோர், மேற்கு தமிழகத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகின்றனர்.
அதன்படி, இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வனிதா மோகன் மற்றும் மேற்குறிப்பிட்ட 7 மாவட்ட பிரதிநிதிகள் இன்று கோவை வந்த மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்து மேற்கு தமிழக மேலாண்மை குறித்தான குறிப்பாணையினை வழங்கினர்.
அந்த குறிப்பாணையில், கோவையில் கிடப்பில் போடப்பட்டுள்ள விமான விரிவாக்கப் பணிகள் உடனடியாக துவங்க உத்தரவிட வேண்டும். மேலும், கடந்த 2011-ஆம் ஆண்டு கோவை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அதற்குண்டான சரியான வளர்ச்சிப் பணிகள் விமான நிலையத்தில் இல்லை.
மத்திய அரசு உடனடியாக இவ்விசத்தில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். மேலும், தமிழகத்தின் கிடப்பில் போடப்பட்டுள்ள பல வளர்ச்சித்திட்ட பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என அந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைப் பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, இந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
அதன்படி, இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வனிதா மோகன் மற்றும் மேற்குறிப்பிட்ட 7 மாவட்ட பிரதிநிதிகள் இன்று கோவை வந்த மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்து மேற்கு தமிழக மேலாண்மை குறித்தான குறிப்பாணையினை வழங்கினர்.
அந்த குறிப்பாணையில், கோவையில் கிடப்பில் போடப்பட்டுள்ள விமான விரிவாக்கப் பணிகள் உடனடியாக துவங்க உத்தரவிட வேண்டும். மேலும், கடந்த 2011-ஆம் ஆண்டு கோவை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அதற்குண்டான சரியான வளர்ச்சிப் பணிகள் விமான நிலையத்தில் இல்லை.
மத்திய அரசு உடனடியாக இவ்விசத்தில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். மேலும், தமிழகத்தின் கிடப்பில் போடப்பட்டுள்ள பல வளர்ச்சித்திட்ட பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என அந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைப் பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, இந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.