மேற்கு தமிழக வளர்ச்சி குறித்து மத்திய அமைச்சரிடம் குறிப்பாணை அளித்த கொங்கு குளோபல் ஃபாரம் அமைப்பினர்

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்ட பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது கொங்கு குளோபல் ஃபாரம் அமைப்பு. இந்த அமைப்பில் உள்ளோர், மேற்கு தமிழகத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகின்றனர்.

அதன்படி, இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வனிதா மோகன் மற்றும் மேற்குறிப்பிட்ட 7 மாவட்ட பிரதிநிதிகள் இன்று கோவை வந்த மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்து மேற்கு தமிழக மேலாண்மை குறித்தான குறிப்பாணையினை வழங்கினர்.

அந்த குறிப்பாணையில், கோவையில் கிடப்பில் போடப்பட்டுள்ள விமான விரிவாக்கப் பணிகள் உடனடியாக துவங்க உத்தரவிட வேண்டும். மேலும், கடந்த 2011-ஆம் ஆண்டு கோவை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அதற்குண்டான சரியான வளர்ச்சிப் பணிகள் விமான நிலையத்தில் இல்லை.

மத்திய அரசு உடனடியாக இவ்விசத்தில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். மேலும், தமிழகத்தின் கிடப்பில் போடப்பட்டுள்ள பல வளர்ச்சித்திட்ட பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என அந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனைப் பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, இந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...