மாட்டு இறைச்சிக்கு தடையை எதிர்த்து அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சில குறிப்பிட்ட கால்நடைகளை வெட்டத் தடை விதித்து, விவசாயிகள், தலித்துகள், சிறுபான்மை மக்கள் ஆகியோருக்கு எதிராக செயல்படும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து ஒட்டு மொத்த மக்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை, ஆத்துப்பாலம் பேருந்து நிலையத்தின் அருகில் இன்று மதியம் 2.30 மணிக்கு துவங்கியது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு அறிவித்துள்ள கால்நடை விற்பனை தடை சட்டத்தின் மூலம் இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளை விற்கப்படுவதையும், வெட்டப்படுவதையும் தடை செய்து நாட்டில் மீண்டும் ஒரு ஜனநாயக படுகொலையை செய்துள்ள மோடி தலைமையிலான பாஜக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டம் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் பேசுகையில், இந்திய நாட்டில் 80 சதவிகிதம் மக்களின் உணவு முறையான மாட்டு இறைச்சியை தடை செய்வது அவர்களின் பொருளாதாரத்தின் மீதான தாக்குதலாகும். உணவு உண்பது என்பது தனிமனித உரிமை, அதில் எந்த அரசும் தலையிட முடியாது. மேலும் நம் நாட்டில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவரும் விவசாய மக்களை கண்டுகொள்ளாத மத்திய அரசு மென்மேலும் அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் விதமாக இச்சட்டத்தை அறிவித்துள்ளது. பசு பாதுகாப்பு என்ற போர்வையில் நாட்டின் சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மீது நடத்தப்படும் வன்முறையை ஊக்குவிக்கும் விதமான இந்த மக்கள் விரோத சட்டத்தை பாஜக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.



மேலும், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கேரளா, புதுச்சேரி, கர்நாடக அரசுகளை போன்று தமிழக சட்டமன்றத்திலும் மத்திய அரசின் கால்நடை விற்பனை தடை சட்டத்திற்கு எதிரான தீர்மானம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோவை மாவட்டம் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.



இதில் திராவிட அரசியல் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள், மாணவர், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...