பலவினமாக உள்ள தமிழக அரசை மிரட்டும் விதத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் பேட்டி


தமிழகத்தில் மத்திய அமைச்சர் நேரடியாக ஆய்வு செய்வது, பலவீனமாக உள்ள தமிழக அரசை மிரட்டிப்பார்க்கும் செயல் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் புணரமைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைமையகமான ஜீவா இல்லத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று திறந்து வைத்தார்.



இதனைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

தமிழகத்தில் வறட்சி, மதுவிலக்கு, மருத்துவ மேல்படிப்பில் இட ஒதுக்கீடு ரத்து, காவிரி நதிநீர் மேல்வாரியம் என பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ள நிலையில் உரிமைகளுக்காக போராடும் மக்கள் மீது அரசும், காவல்துறையும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. மக்களின் நலன்கள் மீது அக்கறையின்றி செயல்படும் மாநில அரசு தங்களின் பதவியை காத்துக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. 

தமிழகத்தில் 9-வது முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வரையிலும் இதுவரை தமிழகத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் ஆய்வு நடத்தியது இல்லை. பொது நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சரையே நேரடியாக மத்திய அமைச்சர் மிரட்டுவது ஜனநாயகத்திற்கு எதிரான ஒன்று. 

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் எந்த விதமான பாரபட்சமுமின்றி ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசு சட்டமன்றத்தை உடனடியாகக்கூட்டி மானியக்கோரிக்கையை நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக நேரடியாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதிமுக-வின் இரு அணிகளும் இணைவது எடப்பாடி கையிலோ, ஓ.பன்னீர் செல்வம் கையிலோ இல்லை. இவ்விவகாரம் பிரதமர் மோடியின் கையில் இருக்கிறது" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.



முன்னதாக புதுப்பிக்கப்பட்ட ஜீவா இல்லத்தை இரா.முத்தரசன் மற்றும் பொதுவுடமை தலைவர் ஜீவா அவர்களின் உருவச்சிலையை மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன் ஆகியோர் திறந்துவைத்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தலைமை தாங்கினார். நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.சண்முகம் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் சிபிஐ மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.ஆறுமுகம் மற்றும் தங்கவேல் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...