பாஜக தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் காலுன்ற முடியாது -மாநிலங்களவை எம்.பி. கனிமொழி பேச்சு.


பாஜக தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் காலுன்ற முடியாது எனவும், இந்தியை திணித்து தமிழர்களின் மொழியையும், அடையாளத்தையும் அழித்துவிட பாஜக முயல்கிறது எனவும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை ஆவாராம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக மகளிரணி செயலாளரும், மாநிலங்களை உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார்.



அப்போது பேசிய அவர், மத்திய பாஜக அரசை எதிர்த்து குரல் கொடுக்க கூட தமிழக அரசிற்கு தைரியமில்லை எனவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முன் குனிந்து நடந்த அதிமுக அமைச்சர்கள், தற்போது டெல்லிக்கு முன் குனிந்து நடக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். இந்தி மொழியை திமுக எதிர்க்கவில்லை எனவும், இந்தி திணிப்பை தான் எதிர்ப்பதாகவும் சுட்டிகாட்டிய அவர், மைல்கல், மத்திய அரசு அலுவலகங்கள், டிவிட்டர் என அனைத்து இடங்களிலும் இந்தியை நுழைப்பதில் மட்டுமே மத்திய அரசு அக்கறையுடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

இந்தி தேசிய மொழி இல்லை எனவும், 22 ஆட்சி மொழிகளில் ஒன்று தான் இந்தி எனவும் கூறிய அவர், இந்தி திணிக்கப்பட்டால் மற்றுமொரு மெரினா போராட்டத்திற்கு மாணவர்கள் தயாராகி கொள்ளுங்கள் என தெரிவித்தார். இந்தி கற்றுக்கொள்ளவில்லை எனில் நான் தேசத்துரோகி என்றால், தேச துரோகியாக இருக்கவே பெருமைபடுகிறேன் என கனிமொழி தெரிவித்தார்.

தலைகீழாக நின்றாலும் பாஜக தமிழகத்தில் காலுன்ற முடியாது எனவும், இந்தியை திணித்து தமிழர்களின் மொழியையும், அடையாளத்தையும் அழித்து விட பாஜக முயல்கிறது எனவும் குற்றம்சாட்டிய அவர்,  இந்தி திணிக்கப்பட்டால் மாணவர்கள் ஒன்றுபட்டு நின்று எதிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...