கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் க.விக்னேஷ் திறந்து வைத்தார். மேலும் ரூ.26.90 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய பணிகளுக்கான பூமி பூஜையிலும் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். சுந்தராபுரம் புதிய அங்கன்வாடி மையம், கல்லுக்குழி வீதி சுகாதார ஆய்வாளர் அலுவலகம், சாரதா மில் சாலையில் பயணியர் நிழற்குடை, போத்தனூரில் ஆழ்துளைக் கிணறு, கோணவாய்க்கால்பாளையத்திற்கு குழாய் நீர் விநியோகம், கணேசபுரத்தில் சிறுபாலம் ஆகியவை இதில் அடங்கும். மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் க.விக்னேஷ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் ரூ.26.90 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய பணிகளுக்கான பூமி பூஜையிலும் அவர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.



மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் முன்னிலையில், இன்று (16.09.2026) கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.



அமைச்சர் க.விக்னேஷ், கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.94-க்கு உட்பட்ட சுந்தராபுரம், பதிவாளர் காலனி பகுதியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்தார். அதே வார்டுக்கு உட்பட்ட கல்லுக்குழி வீதியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சுகாதார ஆய்வாளர் அலுவலக கட்டடத்தினையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.



அதனைத் தொடர்ந்து, அமைச்சர் ரூ.26.90 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பின்வரும் பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு, பணிகளை துவக்கி வைத்தார்:

வார்டு எண்.96-க்குட்பட்ட சாரதா மில் சாலை, சங்கம் வீதி பகுதியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.8.85 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைப்பது; வார்டு எண்.99-க்குட்பட்ட போத்தனூர், அற்புதம் நகர் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.9.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைப்பது; வார்டு எண்.85-க்குட்பட்ட கோணவாய்க்கால்பாளையம் பகுதிக்கு பிரதான குழாய் மூலம் கிணற்று நீர் விநியோகம் செய்வது; மற்றும் வார்டு எண்.100-க்குட்பட்ட கணேசபுரம் அம்மன் நகர் பகுதியில் (முத்து மாரியம்மன் கோயில் பின்புறம்) மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.8.65 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் கட்டுவது.



இந்நிகழ்ச்சியில், துணை மேயர் ர.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், செயற்பொறியாளர் மதிஜாக்குலின் ஜாய் லதா, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், கார்த்திகேயன், உதவி பொறியாளர்கள் நடராஜன், இந்திராகாந்தி, இளம் பொறியாளர் ஜெகதீஸ்வரி, சுகாதார ஆய்வாளர் பாலகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...