குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்தது இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றி

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்தார் என அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உள்ளது. இவ்விவகாரத்தில் பாகிஸ்தானில் நீதி போராட்டம் என்பது சாத்தியமில்லாதது என இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவ்வை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்கவேண்டும் எனவும் அடுத்த உத்தரவு வரும் வரையில் மரண தண்டனையை நிறைவேற்ற கூடாது எனவும் பாகிஸ்தானுக்கு உத்தவிட்டது.

இதுதொடர்பாக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பேசுகையில், குல்பூஷண் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் தடை விதித்தது இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றி என கூறிஉள்ளார். வெங்கையா நாயுடு பேசுகையில், இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. பாகிஸ்தானின் பொய்யானது நிராகரிக்கப்பட்டது, இது பாகிஸ்தானுக்கு சரியான மூக்குடைப்பு.

சர்வதேச மையத்தில் பாகிஸ்தானின் நிலையானது வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்த நாடுமே மகிழ்ச்சியில் உள்ளது. அவர்கள் கொண்டாடி வருகிறார்கள். வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நான் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...