வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக கரும்புக்கடை பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட இரு ஸ்மார்ட்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: உக்கடம் பகுதியில் கேரளா மாநில லாட்டரி சீட்டுகளை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோதமாக பொதுமக்களிடம் பணம் வசூலித்து, வாட்ஸ்-அப் மூலம் லாட்டரி எண்களை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உக்கடம் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பிற்பகல் சுமார் 3 மணியளவில் உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு நின்றிருந்த ஒருவர் செல்போன் மூலம் லாட்டரி எண்களைப் பதிவு செய்து, வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூலித்துக் கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் கரும்புக்கடை ஆசாத் நகரைச் சேர்ந்த பயாஸ்தீன் (33) என்பதும், தற்போது உக்கடம் கே.ஜி. லே-அவுட் பகுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.

போலீசாரின் விசாரணையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் பொதுமக்களிடம் பணம் வசூலித்து, பரிசு விழுந்ததாகக் கூறி ஏமாற்றும் வகையில் சட்டவிரோத லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவரிடம் இருந்து

இரண்டு ஸ்மார்ட்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த செல்போன்கள் லாட்டரி எண்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப்பதிவு செய்து, வாட்ஸ்-அப் மூலம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத லாட்டரி சூதாட்டம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Newsletter

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...