கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் குடிநீர், சாலை, சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் 51 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. உடனடி நடவடிக்கைக்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையிலும், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS முன்னிலையிலும் இன்று (18.08.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 51 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.



பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஷாஹுல் ஹமீது என்பவர் குடும்ப சூழ்நிலை காரணத்தினால் மாநகராட்சி கடையை நடத்திட இயலவில்லை என தெரிவித்ததன் அடிப்படையில், அவருக்கான வைப்புத் தொகை ரூ.50,000 இன்று காசோலையாக மேயர் மூலம் திரும்ப வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் த.குமரேசன், மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், நகர்நல அலுவலர் Dr.வீ.சி.சுபாஷ் காந்தி, நகரமைப்பு அலுவலர் தாமோதரன், உதவி ஆணையாளர்கள் பிரகாஷ் (நிர்வாகம்), மகேஷ்கனகராஜ் (வருவாய்), தட்சிணாமூர்த்தி (கிழக்கு), நர்மதா (மேற்கு), மோகனசுந்தரி (வடக்கு), கணேசன் (மத்தியம்), செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், ஆய்வாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...