கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக்குழுமத் தலைவர் டாக்டர் இராச. வசந்தகுமார் தேசியக் கொடியேற்றி, NCC மற்றும் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். துணைவேந்தர் முனைவர் சு. இரவி சுதந்திரதின பேருரை வழங்கினார்.


Coimbatore: கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா 15.08.2026 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவில், கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர் இராச. வசந்தகுமார் தலைமையேற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, NCC மற்றும் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.






துணைவேந்தர் முனைவர் சு. இரவி சுதந்திர தின விழாப் பேருரை வழங்கினார். அவர் தனது உரையில், "இந்திய இளைஞர்களின் உழைப்பும், பொறுப்புணர்வும் உலக அரங்கில் உயர்ந்து நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது. இதற்கு வித்திட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் என்றும் மறவாமல் போற்றப்பட வேண்டும். அதன் வெளிப்பாடாக, ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க இளைஞர்கள் உறுதி கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.




கற்பகம் கல்விக் குழுமங்களின் முதன்மைச் செயலர் க. முருகையா, பதிவாளர் முனைவர் பீ. வீ. பிரதீப், தேர்வாணையர் முனைவர் ப. பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், NCC, NSS மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்களது சிறந்த பங்களிப்புக்காகப் பாராட்டுப் பெற்றனர். முதன்மையர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் விழாவில் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...