ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு தேசிய தரநிர்ணயச் சான்றிதழ் (என்ஏபிஎச்)

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை, இந்திய தரக் கவுன்சில் வழங்கும் அங்கீகாரச் சான்றினை பெற்றுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சுகாதார கவனிப்பு தேசிய அங்கீகார வாரியம் (என்ஏபிஎச்எல்) இதை வழங்கியுள்ளது.

மருத்துவமனைக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் குறித்து, மருத்துவமனையை நிர்வாகித்து வரும் எஸ்என்ஆர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஆர்.விஜயக்குமார் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளாக படிப்படியான வளர்ச்சியை எட்டி வரும் இந்த மருத்துவமனைக்கு, நோயாளிகளின் கவனிப்புக்கு இந்த சான்றால் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, திறன் போன்றவைகளில் என்ஏபிஎச் நிர்ணயித்த தரத்தில் எங்களது சேவைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்,” என்றார்.

என்ஏபிஎச், சான்றுக்கான தேவையான முறைகளில், மருத்துவமனையின் சீரிய நிர்வாகம், தீ விபத்திலிருந்து பாதுகாப்பு, பேரிடர் கையாளும் திறன், தொற்று நோய் தடுப்பு பயிற்சிகள், செவிலியர் அழைப்பு முறைகள், கருவிகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, நோயாளிகளின் கருத்துக்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான தரச்சோதனைகள், பணியாளர் திருப்திபோன்றவை மருத்துவமனையின் தரமான செயல்பாடுகளாக மட்டுமின்றி, நிலையானதாகவும் இருக்கும் என்ற உறுதியை அளித்துள்ளது.

நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு நிர்ணயங்களை மிகவும் சரியாக அளிக்க இந்த என்ஏபிஎச் சான்று, தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. தரமான சிகிச்சை அளிப்பதால், வாழ்க்கையை வளமிக்க நலமானதாக மாற்றுவதோடு மட்டுமின்றி, பல்வேறு சமுதாய சேவைகளையும் மேற்கொண்டு பல சாதனைகளையும் படைத்துள்ளது. எட்டு மணி நேரத்தில் உடல் உறுப்பு தான உறுதி மொழியை அதிகம் பெற்று கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...