கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்தார். பூங்கா நகர் பகுதியில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் உந்து நிலைய மேம்பாட்டு பணிகளை விரைவுபடுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


Coimbatore: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 23க்கு உட்பட்ட பகுதிகளில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று நேரடி ஆய்வு மேற்கொண்டார். பூங்கா நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து நிலைய மேம்பாட்டு பணிகளை உன்னிப்பாக ஆய்வு செய்தார்.

பூங்கா நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மேயர் நேரில் பார்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் நடைபெறுகிறதா என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். தேக்கத் தொட்டியின் செயல்பாடு மற்றும் நீர் விநியோக நிலை குறித்து அலுவலர்களிடம் விளக்கம் கேட்டறிந்தார்.



அதனைத் தொடர்ந்து, சித்ரா விமான நிலையம் அருகில் உள்ள பூங்கா நகர் பகுதியில் அமைந்துள்ள சுமார் 1 எம்.எல்.டி திறன் கொண்ட கழிவுநீர் உந்து நிலையத்தின் மேம்பாட்டு பணிகளை மேயர் ஆய்வு செய்தார். கழிவுநீர் உந்து நிலைய புனரமைப்பு பணிகளை விரைவாக முடிக்குமாறு அலுவலர்களுக்கு உறுதியான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் மணியன், உதவி நகர திட்டமிடுநர் சீனிவாசன், மண்டல சுகாதார அலுவலர் சந்திரன், உதவி பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

வார்டு 23 பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்கு மேயர் சிறப்பு கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் நிர்வாகம் தொடர்பான பணிகள் முன்னுரிமை அடிப்படையில் முடிக்கப்படும் என மேயர் உறுதியளித்தார்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...