கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்கு மற்றும் மத்திய மண்டலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Coimbatore: கோவை மாநகராட்சி கிழக்கு மற்றும் மத்திய மண்டலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத், ஆகியோர், இன்று (28.07.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.24க்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் சாலையில், இலட்சுமி நகர் முதல் கொடிசியா சாலை வரை இணைப்புச் சாலை மற்றும் தெரு விளக்குகள் அமைக்கும் பணிகள் குறித்தும், வார்டு எண்.59-க்குட்பட்ட சிங்காநல்லூர், கிருஷ்ணா கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா மேம்பாட்டு பணிகள் குறித்தும், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.



அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மத்திய மண்டலம் வார்டு எண். 62க்கு உட்பட்ட சாரமேடு, நஞ்சுண்டாபுரம் சாலை விரிவாக்க பணிகள் தொடர்பாக பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.

இவ்வாய்வுகளின் போது, கணக்குகள் குழுத்தலைவர் தீபா தளபதி இளங்கோ, நகரமைப்பு அலுவலர் தாமோதரன், உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் இளங்கோவன் (பொ), சரவணக்குமார் (பொ), மாமன்ற உறுப்பினர் அகமது கபீர், உதவி நகர திட்டமிடுநர் சீனிவாசன், மண்டல சுகாதார அலுவலர்கள் சந்திரன், குணசேகரன், உதவி பொறியாளர்கள் ஃபர்மான் அலி, கமலக்கண்ணன், சுந்தர்ராஜன், சுகாதார ஆய்வாளர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...