கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக ஜூலை 8 முதல் 21 வரை ஐந்து மண்டலங்களில் இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. சுமார் 5000 நபர்களுக்கு உயர்தர மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்படும்.
Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வருடாந்திர இலவச மருத்துவ முகாம்கள் ஜூலை 8 முதல் 21 வரை நடத்தப்பட உள்ளன. மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS அவர்களின் உத்தரவின்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வழிகாட்டுதலில் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் கட்டம் கட்டமாக இந்த மருத்துவ முகாம்கள் நடைபெறும். மத்திய மண்டலத்தில் ஜூலை 8 முதல் 10 வரையிலும், கிழக்கு மண்டலத்தில் ஜூலை 13 மற்றும் 14 தேதிகளிலும், மேற்கு மண்டலத்தில் ஜூலை 15 மற்றும் 16 தேதிகளிலும், வடக்கு மண்டலத்தில் ஜூலை 17 மற்றும் 18 தேதிகளிலும், தெற்கு மண்டலத்தில் ஜூலை 20 மற்றும் 21 தேதிகளிலும் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இம்முகாம்களில் பன்முக உயர்தர மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இருதயம், நுரையீரல், கண்பார்வை, எலும்பு மூட்டு மருத்துவம், இயன்முறை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், வாழ்க்கை நடைமுறை மாற்ற நல்வாழ்வு மையம், மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நல மருத்துவம், பாத பரிசோதனை மையம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.
மருத்துவ பரிசோதனைகளில் ஹீமோகுளோபின், இரத்த வகை கண்டறிதல், இரத்த சர்க்கரை அளவு, இரத்த கொழுப்பு அளவு, பித்த நீர் திரவம், யூரியா கிரியாட்டினின், VDRL, HIV மாதிரி பரிசோதனை, ECG ஸ்கேன், கர்ப்பப்பை வாய் பரிசோதனை ஆகியவை அடங்கும். சிறப்பு மருத்துவர்களால் புற்றுநோய் பரிசோதனை மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.
பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், தேவைப்படும் தூய்மைப்பணியாளர்களுக்கு மேல்சிகிச்சைக்கான பரிந்துரைகள் வழங்கப்படும். இம்முகாமில் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என சுமார் 5000 நபர்களுக்கு மேல் பயன்பெறும் வகையில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தூய்மைப்பணியாளர்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாண்டும் விரிவான மருத்துவ பரிசோதனைகளுடன் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் கட்டம் கட்டமாக இந்த மருத்துவ முகாம்கள் நடைபெறும். மத்திய மண்டலத்தில் ஜூலை 8 முதல் 10 வரையிலும், கிழக்கு மண்டலத்தில் ஜூலை 13 மற்றும் 14 தேதிகளிலும், மேற்கு மண்டலத்தில் ஜூலை 15 மற்றும் 16 தேதிகளிலும், வடக்கு மண்டலத்தில் ஜூலை 17 மற்றும் 18 தேதிகளிலும், தெற்கு மண்டலத்தில் ஜூலை 20 மற்றும் 21 தேதிகளிலும் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இம்முகாம்களில் பன்முக உயர்தர மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இருதயம், நுரையீரல், கண்பார்வை, எலும்பு மூட்டு மருத்துவம், இயன்முறை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், வாழ்க்கை நடைமுறை மாற்ற நல்வாழ்வு மையம், மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நல மருத்துவம், பாத பரிசோதனை மையம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.
மருத்துவ பரிசோதனைகளில் ஹீமோகுளோபின், இரத்த வகை கண்டறிதல், இரத்த சர்க்கரை அளவு, இரத்த கொழுப்பு அளவு, பித்த நீர் திரவம், யூரியா கிரியாட்டினின், VDRL, HIV மாதிரி பரிசோதனை, ECG ஸ்கேன், கர்ப்பப்பை வாய் பரிசோதனை ஆகியவை அடங்கும். சிறப்பு மருத்துவர்களால் புற்றுநோய் பரிசோதனை மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.
பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், தேவைப்படும் தூய்மைப்பணியாளர்களுக்கு மேல்சிகிச்சைக்கான பரிந்துரைகள் வழங்கப்படும். இம்முகாமில் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என சுமார் 5000 நபர்களுக்கு மேல் பயன்பெறும் வகையில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தூய்மைப்பணியாளர்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாண்டும் விரிவான மருத்துவ பரிசோதனைகளுடன் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.