ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம் வென்றது. கோவையைச் சேர்ந்த வீராங்கனை ஹாசினி மற்றும் வீரர் பிரனேஸ் ஆகியோர் ‘டீம் ரிலே’ போட்டியில் அணியின் சார்பில் விளையாடி பதக்க வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.


கோவை: உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்று வரும் ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், தமிழ்நாடு அணியைச் சேர்ந்த கோவை வீரர், வீராங்கனை வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இவர்கள், சர்வதேச அரங்கில் தமிழகத்தின் விளையாட்டு திறமையை நிரூபித்துள்ளனர்.


ஜூன் 21 முதல் 28 வரை உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் ‘ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026’ போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இந்தியா உட்பட 21 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு பிரிவுகளில் கடுமையான போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘டீம் ரிலே’ பிரிவில் தமிழ்நாடு அணி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியது.


நேற்று நடைபெற்ற டீம் ரிலே போட்டியில் இந்தியா சார்பில் களமிறங்கிய தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தது. இதில், கோவையைச் சேர்ந்த வீராங்கனை ஹாசினி மற்றும் வீரர் பிரனேஸ் ஆகியோர் அணியின் சார்பில் விளையாடி பதக்க வெற்றியில் முக்கிய பங்காற்றினர். இருவரும் சிறப்பான ஒருங்கிணைப்புடன் போட்டியிட்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.




வீராங்கனை ஹாசினி இதுவரை 15 தேசிய பதக்கங்களையும், 2 சர்வதேச பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார். இளம் வயதிலேயே மவுண்டன் பைக்கில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் இவர், தொடர்ந்து சிறப்பான செயல்திறனை காட்டி வருகிறார். அதேபோல் வீரர் பிரனேஸ் 9 தேசிய பதக்கங்களையும், 4 சர்வதேச பதக்கங்களையும் பெற்று தனது திறமையை நிரூபித்துள்ளார். இருவரும் கடந்த பல ஆண்டுகளாக மவுண்டன் பைக்கில் தொடர்ச்சியான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழ்நாடு அரசின் STAD (Sports Development Authority of Tamil Nadu) பிரிவு வீரர்களுக்கு தேவையான பயணச் செலவுகள், உணவு, தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.




வெண்கலப் பதக்கம் வென்ற ஹாசினி மற்றும் ப்ரனேஸுக்கு தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன், கோவை சைக்கிளிங் அசோசியேஷன், பெற்றோர், பயிற்சியாளர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...