முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, மாநகராட்சியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) வலியுறுத்தியுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியின் முத்தண்ணன்குளம் பகுதியில் இளைஞர்களின் விளையாட்டு வளர்ச்சிக்காக ரூ.60 லட்சம் மதிப்பில் Turf மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டு,இளைஞர்களின் பயன்பாட்டிற்காக செயல்பட வேண்டிய மைதானம், தற்போது "KOVAI ADDA" என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு வணிக நோக்கில் இயக்கப்பட்டு வருவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து கண்டனம் அறிக்கை வெளியிட்டுள்ள, DYFI கோவை மாவட்டத் தலைவர் ஏ.என். ராஜா மற்றும் மாவட்டச் செயலாளர் எம். தினேஷ் ராஜா, இந்த Turf மைதானத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மைதானம், தற்போது தனியார் நிறுவனத்தின் லாபம் ஈட்டும் கருவியாக மாற்றப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கண்டனம் தெரிவித்தனர்.



எனவே, கோவை மாநகராட்சி அந்த தனியார் நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து, Turf மைதானத்தை தனது நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என DYFI கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், அனைத்து தரப்பு இளைஞர்களும் பயன்படுத்தும் வகையில் குறைந்த கட்டணத்தில் அல்லது குறிப்பிட்ட நேரங்களில் இலவசமாக பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், மக்கள் பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்தை தனியாரின் லாப நோக்கிலிருந்து மீட்டெடுக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேரடி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றுஅறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...